முதன் முதலாய் எழுதிய முழுக்கவிதை இதுதான்..
"மதம் கொன்ற மானுடம்..."
எழுதினேன் எழுதினேன்...
வார்த்தைகள் வழுக்கின...
வெட்டினேன் கசக்கினேன்
ஒற்றைகள் ஒழிந்தன - குப்பை
கூடைகள் கனந்தன...
என் பேனாப்பெண் கேட்டாள்...
"மானுடத்தின் விலை
கிலோ எவ்வளவு?"
தெரியவில்லை - உங்களிற்கு
தெரியுமா?
மரணங்கள் மலிந்துவிட்ட
கறைபடிந்த களமிதில்,
மானுடத்தின் விலை
கிலோ எவ்வளவு?
இது மதங்களின் தேசம்தான் - ஆனால்
மானுடத்தின் தேசம் அல்ல - நிச்சயமாக
இது மதம் "கொண்ட" தேசம் - அதனால்தான்
மானுடம் "கொன்ற" தேசமாகிவிட்டது...
மனிதன் தழைக்க வந்த
மதங்களே இன்று களைகளாக
மாறிவிட்ட காலமிது.
பிணமதை எரித்து - இங்கு
மதமது குளிர் காய்கிறது.
இயேசுவே!
சிலுவையில் மானுடத்தை
மரிக்க விட்டு நீர் மட்டும்
ஏன் மீண்டு வந்தீர்?
கௌதம புத்தரே!
பரி நிர்வாணத்தில் மானுடத்தை
மரிக்கச் செய்தீரா?
நபிகளே!
புனிதப் போரில் - உங்கள்
குதிரைக் குழம்புகளில் சிக்கி
மானுடம் சின்னாபின்னமாகி விட்டதா?
கிருஷ்ணா!
நிராயுதபாணியை ஆயுதத்தால்
தாக்கச் சொன்ன நீசனே..
நீயும் ஒரு கடவுளா?
இலக்கங்களுக்கு பின்னால்
பூச்சியங்களை இலட்சியங்களாக்கி
இலட்சங்களை கொட்டி
பலதரம் போய் வருவீர்
மதயாத்திரைகள் - ஆனால்
பக்கத்து வீட்டுக்காரன்
படுத்த படுக்கையாய்
சாகக்கிடக்கிறானே.. - சாட்டுக்காயினும்
அவனை நினைத்தாவது பார்த்தாயா?
அடுத்தவன் இறப்பையே விளம்பரமாக்கும் உங்களைவிட
தெருக்கோடி நாய்கள் மேல்...
"மதம் கொன்ற மானுடம்..."
எழுதினேன் எழுதினேன்...
வார்த்தைகள் வழுக்கின...
வெட்டினேன் கசக்கினேன்
ஒற்றைகள் ஒழிந்தன - குப்பை
கூடைகள் கனந்தன...
என் பேனாப்பெண் கேட்டாள்...
"மானுடத்தின் விலை
கிலோ எவ்வளவு?"
தெரியவில்லை - உங்களிற்கு
தெரியுமா?
மரணங்கள் மலிந்துவிட்ட
கறைபடிந்த களமிதில்,
மானுடத்தின் விலை
கிலோ எவ்வளவு?
இது மதங்களின் தேசம்தான் - ஆனால்
மானுடத்தின் தேசம் அல்ல - நிச்சயமாக
இது மதம் "கொண்ட" தேசம் - அதனால்தான்
மானுடம் "கொன்ற" தேசமாகிவிட்டது...
மனிதன் தழைக்க வந்த
மதங்களே இன்று களைகளாக
மாறிவிட்ட காலமிது.
பிணமதை எரித்து - இங்கு
மதமது குளிர் காய்கிறது.
இயேசுவே!
சிலுவையில் மானுடத்தை
மரிக்க விட்டு நீர் மட்டும்
ஏன் மீண்டு வந்தீர்?
கௌதம புத்தரே!
பரி நிர்வாணத்தில் மானுடத்தை
மரிக்கச் செய்தீரா?
நபிகளே!
புனிதப் போரில் - உங்கள்
குதிரைக் குழம்புகளில் சிக்கி
மானுடம் சின்னாபின்னமாகி விட்டதா?
கிருஷ்ணா!
நிராயுதபாணியை ஆயுதத்தால்
தாக்கச் சொன்ன நீசனே..
நீயும் ஒரு கடவுளா?
இலக்கங்களுக்கு பின்னால்
பூச்சியங்களை இலட்சியங்களாக்கி
இலட்சங்களை கொட்டி
பலதரம் போய் வருவீர்
மதயாத்திரைகள் - ஆனால்
பக்கத்து வீட்டுக்காரன்
படுத்த படுக்கையாய்
சாகக்கிடக்கிறானே.. - சாட்டுக்காயினும்
அவனை நினைத்தாவது பார்த்தாயா?
அடுத்தவன் இறப்பையே விளம்பரமாக்கும் உங்களைவிட
தெருக்கோடி நாய்கள் மேல்...